நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஹ்மா உதவித் தொகை ஜனவரி 22 முதல் வழங்கப்படும்

பெட்டாலிங் ஜெயா:

முதல் கட்ட ரஹ்மா உதவித் தொகை ஜனவரி 22 முதல் வழங்கப்படவுள்ளது. 

இந்த ஆண்டு 700,000 பேர் இந்த உதவித் தொகையைப் பெறவுள்ளதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  

மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த உதவித் தொகையை வழங்கவுள்ளது. 

திருமணமானவர்களுக்கு கடந்த ஆண்டு 600 வெள்ளி வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 1,200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேவேளையில், திருமணமாகாதவர்களுக்கு 600 வெள்ளி வழங்கப்படுகிறது.  

மேலும், இந்தாண்டு அரசாங்கம் இந்த உதவித் திட்டத்திற்காக 700 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset