நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்கு அரசு உதவ வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

பத்துமலையில் மேற்கொள்ளப் படவிருக்கும் திட்டங்களுக்கு அரசு உதவ வேண்டும்.

பத்துமலைக்கு சிறப்பு வருகை தந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிடம் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

பத்துமலையில் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பல திட்டங்களை செய்து வருகிறது.

அவ்வகையில் பத்துமலையின் மேல்குகைக்கு செல்ல மின் மடிக்கட்டுகள் காட்டுவதற்கான திட்டம் மேற்கொள்ள உள்ளது.

அதே வேளையில் 3 ஆயிரம் பேர் அமரக் கூடிய மண்டபம் கட்டுவதற்கான திட்டமும் தொடங்கவுள்ளது.

அனுமதி கிடைத்த பின் இதற்கான திட்டங்கள் தொடங்கப்படும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற அரசாங்கம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர வேண்டும்.

மேலும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள ஆலயங்களின் பராமரிப்புக்காக முன்னாள் மனிதவள அமைச்சர் சிவக்குமார் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை பெற்று தந்தார்.

இவ்வேளையில் தேவஸ்தானம் அவருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இந்நிதி அரசாங்க தரப்பில் இருந்து தொடரும் என்று டான்ஸ்ரீ நடராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset