செய்திகள் மலேசியா
பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்கு அரசு உதவ வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலையில் மேற்கொள்ளப் படவிருக்கும் திட்டங்களுக்கு அரசு உதவ வேண்டும்.
பத்துமலைக்கு சிறப்பு வருகை தந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிடம் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இக்கோரிக்கையை முன்வைத்தார்.
பத்துமலையில் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பல திட்டங்களை செய்து வருகிறது.
அவ்வகையில் பத்துமலையின் மேல்குகைக்கு செல்ல மின் மடிக்கட்டுகள் காட்டுவதற்கான திட்டம் மேற்கொள்ள உள்ளது.
அதே வேளையில் 3 ஆயிரம் பேர் அமரக் கூடிய மண்டபம் கட்டுவதற்கான திட்டமும் தொடங்கவுள்ளது.
அனுமதி கிடைத்த பின் இதற்கான திட்டங்கள் தொடங்கப்படும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற அரசாங்கம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர வேண்டும்.
மேலும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் உள்ள ஆலயங்களின் பராமரிப்புக்காக முன்னாள் மனிதவள அமைச்சர் சிவக்குமார் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை பெற்று தந்தார்.
இவ்வேளையில் தேவஸ்தானம் அவருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இந்நிதி அரசாங்க தரப்பில் இருந்து தொடரும் என்று டான்ஸ்ரீ நடராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளர்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm