நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மனிலா: 

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் கழகம் தெரிவித்துள்ளது. 

இருந்தும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வகிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

சாராங்கானி பகுதியிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அவ்வப்போது ஏற்படுவது வழக்கமாகும். 

கடந்த மாதம் மின்டாநோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset