நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நடுவானில் பறந்த போது திறந்த விமானக் கதவு: அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம்

அலஸ்கா:

அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையமொன்றில் இருந்து 171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் அலஸ்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மக்ஸ் ரக விமானம் நேற்று புறப்பட்டது.

விமானம், நடுவானில் 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மையப் பகுதியில் இருந்த கதவு திறந்து விமானத்தை விட்டு வீசியடிக்கப்பட்டுள்ளது.

திடீரென காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால், விமானத்தில் இருந்து பல பொருட்கள் உறிஞ்சப்பட்டதால் பயணிகளிடையே பதற்றம் நிலவியது.

இதன்பின் உடனடியாக விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு, பாதுகாப்பாக நேற்றிரவு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset