செய்திகள் உலகம்
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு: 211 பேரைக் காணவில்லை
தோக்கியோ:
இஷிகாவா மாநிலத்தில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மரண எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இப்பகுதியில் இதுவரை மொத்தம் 211 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் பாதிக்கப்பட்ட நகரமான வாஜிமாவில் 59 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், சுமார் 100 பேர் புதையுண்டு கட்டடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் நில அதிர்வுகள் பதிவாகி உள்ளன.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ) ரிக்டர் அளவுகோலில் 5.4 அளவுள்ள நிலநடுக்கம் நோட்டோ பகுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 5.25 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
மழையைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய மண்சரிவுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 14 நகரங்கள் மற்றும் நகரங்களில் சுமார் 24,000 வீடுகள் மின்சாரத் தடையை எதிர்கொள்வதோடு 66,000 வீடுகளுக்கு நீர் விநியோகம் இல்லாமல் உள்கட்டமைப்பு கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm