நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லட்சத்தீவு கடலில் மோடி snorkelling சாகசம்: மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை எதிர்க்கட்சிகள் கேள்வி

புது டெல்லி:

லட்சத்தீவு கடல் பகுதியில் பிரதமர் மோடி  snorkelling சாகசத்தை மேற்கொண்டார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

9 மாதங்களாக கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூருக்கு செல்லாமல் பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி நேரடியாக லச்சத்தீவுக்கு சென்றார்.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இடையே snorkelling, skuuba diving எனும் கடலுக்கு அடியில் நீந்தும் சாகசத்தில் அவர் ஈடுபட்டார்.

இது தொடர்பான படங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டார்.  நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset