நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை- பினாங்கு இடையே நேரடி விமான சேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

திருச்சி:

சென்னை- பினாங்கு இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும். சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும்.

சென்னை மெட்ரோ திட்ட பணிகளை வேகப்படுத்த, மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும்.

தமிழக பேரிடர் நிவாரணத்துக்கு போதிய நிதி, இரு புற சாலைகள் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் ரத்து ஆகியவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று  மு.க. ஸ்டாலின் பேசினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset