நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மிஸோரமில் தஞ்சமடைந்த 151 மியான்மர் ராணுவ வீரர்கள்

புது டெல்லி:

மியான்மர் நாட்டு ராணுவ வீரர்கள் 151 பேர்  சர்வதேச எல்லை வழியாக மிஸோரம் மாநிலம் லாங்தக்லாய் மாவட்டத்தை வந்தடைந்ததாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தெரிவித்தனர்.

இந்நிய எல்லை அருகே கடந்த சில நாள்களாக மியான்மர் ராணுவ வீரர்களுக்கும் ஆயுதம் ஏந்திய அராக்கன் ராணுவப் போராளிகள் எனும் இனக் குழுவுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த மியான்மர் நாட்டு ராணுவ வீரர்களின் முகாமை அராக்கன் போராளிகள் இனக்குழு கைப்பற்றியது.

இதனால் அந்தமுகாமைச் சேர்ந்த 151 ராணுவ வீரர்கள் மிஸோரம் மாநிலம் லாங்தக்லாய் மாவட்டத்துக்கு தப்பி வந்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset