செய்திகள் இந்தியா
குஜராத்தில் மருத்துவத்துக்காக மது குடிக்க அனுமதி கோருவது அதிகரிப்பு
அகமதாபாத்:
குஜராத்தில் மருத்துவக் காரணங்களுக்காக மது வாங்க உரிமம் பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2020ம் ஆண்டு 27,452 பேர் மது உரிமம் வைத்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 43,470 ஆக அதிகரித்துவிட்டது. மாநில மக்கள்தொகை சுமார் 6.7 கோடியாக உள்ளது.
மருத்துவக் காரணங்களுக்காக மது உரிமம் வழங்கப்படுவது தவிர, வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள் குஜராத் வந்தால் அவர்கள் கோரிக்கையின் பேரில் மது உரிமம் அளிக்கப்படுகிறது. ஒரு வாரம் வரை இந்த உரிமம் செல்லுபடியாகும்.
மகாத்மா காந்தி மது விலக்கு கொள்கையை தீவிரமாக வலியுறுத்தி வந்ததால் அவர் பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவுக்கு தடை உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am