நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருப்பூரில் வெள்ள அபாய எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றங்கரையோரத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால், ஆற்றங்காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணியளவில் 83.24 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு விநாடிக்கு 10,194 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.  

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். எனவே அமராவதி ஆற்று கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அவசர உதவி எண்கள் அறிவிப்பு

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு

நெல்லை      - 0462-2501012
தூத்துக்குடி - 0461-2340101
குமரி             - 04652-231077
தென்காசி   - 04633-290548

1070 என்ற அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்

1077 என்ற எண்ணையும் அவசர உதவிக்கு அழைக்கலாம் என அறிவிப்பு

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset