நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எம்.எஸ். தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு 

சென்னை: 

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

 2013ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அறிக்கை அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்

இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவுகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளை கூறியதாக, அவருக்கு எதிராக தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் சம்பத் குமாரை தண்டிக்க வேண்டும் என்றும் தோனி தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர்மோகன் அமர்வு, சம்பத் குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில், தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset