நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர்பாருவில் 11 இடங்களில் வெள்ளம்

ஜொகூர்பாரு:

நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து  ஜொகூர்பாருவில் 11 இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

நேற்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது.

இதனால் ஜொகூர்பாருவில் உள்ள 11 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

ஜாலான் ரோஸ்மேரா உத்தாமா, ஜாலான் செத்தியா 10, செத்தியா இண்டா, ஜாலான் முத்தியாரா எமாஸ் உத்தாமா, ஜாலான் முகமத் அமின் 7, ஜாலான் செத்தியா 11, செத்தியா இண்டா உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன

வெள்ளம் ஏறிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டிருந்தனர்.

குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

கனமழை நின்ற பிறகு தேங்கிய வெள்ள நீர் வடியத் தொடங்கியது என்று ஜொகூர்பாரு மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset