செய்திகள் மலேசியா
ஜொகூர்பாருவில் 11 இடங்களில் வெள்ளம்
ஜொகூர்பாரு:
நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து ஜொகூர்பாருவில் 11 இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
நேற்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது.
இதனால் ஜொகூர்பாருவில் உள்ள 11 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
ஜாலான் ரோஸ்மேரா உத்தாமா, ஜாலான் செத்தியா 10, செத்தியா இண்டா, ஜாலான் முத்தியாரா எமாஸ் உத்தாமா, ஜாலான் முகமத் அமின் 7, ஜாலான் செத்தியா 11, செத்தியா இண்டா உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன
வெள்ளம் ஏறிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டிருந்தனர்.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
கனமழை நின்ற பிறகு தேங்கிய வெள்ள நீர் வடியத் தொடங்கியது என்று ஜொகூர்பாரு மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am