நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய்க்காரர்கள் மட்டுமே பிரதமராகும் வகையில் அரசியலமைப்பை திருத்துங்கள்: வான் பைசால்

கோலாலம்பூர்:

மலாய் - முஸ்லிம்கள் மட்டுமே பிரதமராகும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசியலமைப்பை திருத்த வேண்டும்

பெர்சத்து இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மத் பைசால்  இதனை பரிந்துரைந்தார்.

இங்கிலாந்தில் மலேசிய மாணவர்கள் முன்னிலையில் பேசிய ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், மலேசியாவில் மலாய்க்காரர்கள் அல்லாத ஒருவர் பிரதமராகலாம் என கூறினார்.

கறுப்பினத் தலைவரான பாராக் ஓபாமா அமெரிக்காவை நிறுவி 230 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டின் அதிபரானார்.

இதே போன்று மலேசியாவிலும் ஒரு நாள் அது நடக்கும் என லிம் கிட் சியாங் கூறியிருந்தார்.

அரசியலமைப்பு சட்டத்தில் வாய்ப்புகள் உள்ளது என்ற அடிப்படையில் தான் அவர் அவ்வாறு பேசியுள்ளார்.

ஆகவே மலாய் - முஸ்லிம்கள் மட்டுமே பிரதமராகும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset