
செய்திகள் மலேசியா
பக்தி தி மியூசிகல் கலாச்சார நிகழ்வு இந்திய உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கான இந்திய நாட்டின் உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில் பக்தி தி மியூசிகல் கலாச்சார நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்தியா நாட்டின் வெளியுறவு துறை, கல்வி துறையின் இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, குஜராத் மாநில வட்டார தொழிற்துறை அமைச்சர் பல்வந்த் சிங் ராஜ்புட் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள நுண்கலை மையத்தில் நடைபெற்றது. இந்திய நாட்டின் வெளியுறவு துறை, மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையம் ஆகியவை இந்த கலாச்சார நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தனர்.
இந்திய நாட்டின் பாரம்பரியங்கள், கலைகள் யாவும் வெளிநாடுகளிலும் பறைசாற்றப்படுவது என்பது இந்தியாவிற்குப் பெரும் பெருமையைத் தேடி தருவதாக அமைவதாக டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
இந்த பக்தி மியூசிகல் நிகழ்ச்சியில் பக்திக்கு முதன்மையானவர்களான ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆச்சாரிய இராமானுஜ ஆச்சாரியார் அகியோர்களின் சிறப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
வட இந்தியாவில் இருந்து குரு நாநாக் தேவ், ரவிதாஸ், சுர்தாஸ் சைதன்யா மஹாபிரபு ஆகியோரின் சிறப்புகளும் இதில் அடங்கும். வட மற்றும் தென் இந்தியாவில் இவர்களின் பக்தி பங்களிப்பு என்பது மக்களைப் பக்தி என்னும் வாழ்வியல் முறைக்குக் கொண்டு சென்றது.
கடந்த 1500 வருடங்களாக இருக்கும் பக்தி மார்க்கத்தின் சிறப்பு இந்த இசை கலச்சார நிகழ்வில் கொண்டாடப்பட்டது. மலேசியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கலைஞர்கள் வந்து இணைந்து இசை கச்சேரிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.
பக்தி மார்க்கத்தின் இசை மற்றும் அது குறித்த வாழ்வியல் முறைகளை மக்கள் நன்கு அறிந்த வேளையில் இந்த நிகழ்ச்சியை அனைவரும் பெரிதாக வரவேற்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2025, 6:23 pm
RMK-13 இன் வழி அனைத்து மாநிலங்களும் நன்மை அடையும்: பிரதமர் அன்வர்
October 10, 2025, 6:03 pm
பகாங் ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி புதியதாக கட்டப்படும்: பிரதமர்
October 10, 2025, 5:50 pm
இந்திய சமுதாயத்திற்காக எஸ்டிஆர், சாரா உதவிகள் 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்வு: பிரதமர்
October 10, 2025, 5:32 pm
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு டோல் கட்டணம் குறைப்பு: பிரதமர்
October 10, 2025, 5:22 pm
தீபாவளியை முன்னிட்டு எஸ்டிஆர் உதவித் தொகை அக்டோபர் 18 முதல் வழங்கப்படும்: பிரதமர்
October 10, 2025, 4:49 pm
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 419.2 பில்லியன் ரிங்கிட் ஆகும்: பிரதமர்
October 10, 2025, 1:18 pm
துருக்கி இளவரசர் கணக்கில் 486 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனைகளைத் தடுக்க எம்ஏசிசி உத்தரவைப் பெற்றது
October 10, 2025, 1:17 pm
7 ஹரிமாவ் மலாயா கால்பந்து வீரர்கள் விவகாரம் தொடர்பாக உரிமை கட்சி போலிசில் புகார்
October 10, 2025, 1:16 pm