செய்திகள் மலேசியா
பக்தி தி மியூசிகல் கலாச்சார நிகழ்வு இந்திய உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கான இந்திய நாட்டின் உயர் ஆணையத்தின் ஏற்பாட்டில் பக்தி தி மியூசிகல் கலாச்சார நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்தியா நாட்டின் வெளியுறவு துறை, கல்வி துறையின் இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, குஜராத் மாநில வட்டார தொழிற்துறை அமைச்சர் பல்வந்த் சிங் ராஜ்புட் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள நுண்கலை மையத்தில் நடைபெற்றது. இந்திய நாட்டின் வெளியுறவு துறை, மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையம் ஆகியவை இந்த கலாச்சார நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தனர்.
இந்திய நாட்டின் பாரம்பரியங்கள், கலைகள் யாவும் வெளிநாடுகளிலும் பறைசாற்றப்படுவது என்பது இந்தியாவிற்குப் பெரும் பெருமையைத் தேடி தருவதாக அமைவதாக டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
இந்த பக்தி மியூசிகல் நிகழ்ச்சியில் பக்திக்கு முதன்மையானவர்களான ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் ஆச்சாரிய இராமானுஜ ஆச்சாரியார் அகியோர்களின் சிறப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
வட இந்தியாவில் இருந்து குரு நாநாக் தேவ், ரவிதாஸ், சுர்தாஸ் சைதன்யா மஹாபிரபு ஆகியோரின் சிறப்புகளும் இதில் அடங்கும். வட மற்றும் தென் இந்தியாவில் இவர்களின் பக்தி பங்களிப்பு என்பது மக்களைப் பக்தி என்னும் வாழ்வியல் முறைக்குக் கொண்டு சென்றது.
கடந்த 1500 வருடங்களாக இருக்கும் பக்தி மார்க்கத்தின் சிறப்பு இந்த இசை கலச்சார நிகழ்வில் கொண்டாடப்பட்டது. மலேசியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கலைஞர்கள் வந்து இணைந்து இசை கச்சேரிக்கு மேலும் பலம் சேர்த்தனர்.
பக்தி மார்க்கத்தின் இசை மற்றும் அது குறித்த வாழ்வியல் முறைகளை மக்கள் நன்கு அறிந்த வேளையில் இந்த நிகழ்ச்சியை அனைவரும் பெரிதாக வரவேற்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 8:28 pm
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
