நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் 66 வெளிநாட்டவர்கள் கைது 

ஜொகூர் பாரு:

ஜொகூர் குடிநுழைவுத் துறை பொழுதுபோக்கு மையத்தில் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் 56 பெண்கள் உட்பட மொத்தம் 66 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வாடிக்கையாளர் சேவகர்களாகப் (GRO) பணியாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த ‘ஆப்ஸ் கெகார்’ (Ops Gegar) நடவடிக்கையில் 21 முதல் 51 வயதுக்குட்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று ஜொகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முஹம்மது ருஸ்டி முகமது டருஸ் கூறினார்.

GRO ஆக பணியாற்றியதாக சந்தேகிக்கப்படும் பெண்களில் 47 பேர் தாய்லாந்து, 5 பேர் லாவோஸ், 2 பேர் இந்தோனேசியா,  ,மீதம் இருவர் முறையே வியட்நாம், சீன நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

பார் சேவகர், சுத்தம் செய்யும் பணியாளர்களாக இருந்த ஆடவர்களில்  5 இந்தியர்கள், 2 வியட்நாமியர்கள்,2 இந்தோனேசியர்கள், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

“சோதனை நேரத்தில், சில வெளிநாட்டவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தனர். எனினும், அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆரம்ப விசாரணையில் அவர்கள்  1959/63 குடியேற்றச் சட்டம், 1963 குடியேற்ற விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது, விசாரணைக்கு உதவ இரண்டு '29’ பாரங்கள்  வழங்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக செத்தியா ட்ரோபிகா குடியேற்றக் காவல் நிலைய முகாமிற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset