நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் ஊழல் ஒழிப்பில் அரசின் வெற்றி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

ஊழலைத் தடுக்கும் அரசின் கடுமையான நடவடிக்கைகள் பலனைத் தந்துள்ளதாகவும், அதற்கான சான்றாக ஊழல் உணர்வு குறியீட்டில் (CPI) மலேசியாவின் தரவரிசை மேம்பட்டுள்ளதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மடானி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தங்கள், ஊழல் ஒழிப்பு முயற்சிகளின் விளைவாக, மலேசியா உலக அளவில் 54-வது இடத்துக்கு முன்னேறியதாக அவர் கூறினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ், உள்நாட்டு வரித்துறை, சுங்கத் துறை ஆகியவற்றின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் RM15.5 பில்லியனுக்கும் அதிகமான அரசுத் தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட ‘CPI 2025’ அறிக்கையின்படி, 2024-இல் 57-வது இடத்தில் இருந்த மலேசியா, தற்போது 54-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

- கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset