நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மஇகா சிறப்புக் குழுவை அமைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

அனுமதியில்லாத ஆலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள
மஇகா சிறப்புக் குழுவை அமைக்கும்.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

சட்டப்பூர்வமாக சொந்தமில்லாத நிலத்தில் கட்டப்பட்ட ஆலயம் தொடர்பான பிரச்சினையை கண்காணித்து சமாளிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் மஇகா, மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து ஒரு குழுவை அமைக்கும்.

நிலத்தின் நிலை, வழிபாட்டுத் தலங்களின் உரிமை தொடர்பான சர்ச்சைகள் எழுந்தால், மஇகா ஒரு மத்தியஸ்தராக செயல்படும்.

சம்பந்தப்பட்ட நிலம் வழிபாட்டுத் தலத்திற்குச் சொந்தமானது அல்ல என்று கண்டறியப்பட்டால், கோயில் நிர்வாகத்திற்கு விவேகத்துடன் இடம் கொடுப்பது உட்பட, சிறந்த தீர்வைக் கண்டறிய கட்சி உதவும்.

மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து மஇகாவின் பங்கை, கண்காணித்து உதவ ஒரு குழுவை அமைப்போம்.

நிலம் வழிபாட்டுத் தலத்திற்குச் சொந்தமானதாக இல்லாவிட்டால், கோயிலுக்கும் நில உரிமையாளருக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக இருந்து தீர்வு காண முடியும்.

மேலும் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருந்தால், புத்திசாலித்தனமாக அவர்களை வேறு இடத்திற்கு மாற்றலாம்.

மாற்று நிலத்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுக்கலாம்.

ஆனால் நில உரிமையாளர் நிலத்தை விரும்பினால், நாங்கள் அதை ஒப்படைக்க வேண்டும்.

அதை எங்கள் நிலமாக நாங்கள் கோர முடியாது என்று அவர் தாப்பாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset