நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிறையில் உள்ள தாய் நர்கீஸ் சார்பில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற குழந்தைகள்

ஹெல்சின்கி: 

ஈரான் சிறையில் உள்ள சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதியின் மகனும், மகளும் நோபல் பரிசை பெற்று கொண்டனர். 

ஈரானை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முஹம்மதி. மகளிர் உரிமைகள், ஜனநாயக ஆட்சி, மரண தண்டனைக்கு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடிய நர்கீசுக்கு ஈரான் அரசு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 

டெஹ்ரான் சிறையில் உள்ள நர்கீஸ் முஹம்மதிக்கு இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

நர்கீஸின் கணவர் தாகி ரஹ்மானி, மகன் அலி ரஹ்மானி, மகள் கியானா ரஹ்மானி ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வசித்து வருகின்றனர். 

நர்கீஸின் மகளான கியானா ரஹ்மானி, மகன் அலி ஆகியோர் கூறுகையில், ‘‘எங்கள் தாயை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அது எங்களுக்கு பிரச்னை இல்லை. அவர் எப்பொழுதும் எங்கள் இதயத்தில் இருப்பார். அவருடைய போராட்டங்களை நாங்கள் மதிக்கிறோம்’’ என்றனர். 

இந்த நிலையில் ஓஸ்லோவில் நேற்று நடந்த விழாவில் நர்கீஸ் முஹம்மதிக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அவரது மகன், மகள் ஆகியோர் பெற்று கொண்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset