நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியக் கிண்ண இறுதி போட்டியைக் காண 4,000க்கும் மேற்பட்ட ஜேடிதி ஆதரவாளர்கள் வருகை

பெட்டாலிங் ஜெயா : 

இன்று மலேசியக் கிண்ண இறுதிப்போட்டியில் ஜேடிதி அணியினர் திரெங்கானு எப்.சி அணியைச் சந்தித்து விளையாடவுள்ளனர். 

இந்த இறுதிப் போட்டியைக் நேரில் காண்பதற்கு  4,000க்கும் மேற்பட்ட ஜேடிதி ஆதரவாளர்கள் புக்கிட் ஜலீல் தேசிய அரங்கில் திரண்டுள்ளனர். 

ஜொகூரிலிருந்து  4,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் சுமார் 109 பேருந்துகள் மூலம் புக்கிட் ஜலீல் தேசிய அரங்கிற்கு வந்துள்ளனர். 

லார்கினில் உள்ள டான்ஸ்ரீ டத்தோ ஹாஜி ஹசன் யூனோஸ் அரங்கிலிருந்து 600 ஆதரவாளர்கள் இன்று காலை 8 மணிக்குத் தேசிய அரங்கை நோக்கி புறப்பட்டனர் என்று ஜேடிடி கால்பந்து ஆதரவாளர்கள் கிளப்பின் துணைத் தலைவர் முகமட் ஃபாட்ஸ்லி சாப்பி தெரிவித்துள்ளார்

போட்டியின் போது ஆதரவாளர்கள் எந்தப் பிரச்சனையிலும் ஈடுப்படாமல் இருக்க முன்னதாகவே அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

ஜேடிதி ஆதரவாளர்கள் தங்கள் அணி மீண்டும் மலேசியா கிண்ணத்தை வெல்லும் என்று பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset