செய்திகள் இந்தியா
கர்னி சேனை தலைவர் நேரடியாக சுட்டுக் கொலை: ராஜஸ்தானில் பதற்றம்
ஜெய்பூர்:
ராஜஸ்தானில் ஸ்ரீ ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனை தலைவர் சுக்தேவ் சிங் கோகமேதியை வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிசிடிவி காட்சியில் பதிவான இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் முழு அடைப்பு நடைபெறுகிறது.
ஜெய்பூரின் சியாம் நகர் பகுதியில் சுக்தேவ் சிங் வீட்டுக்கு சந்திக்க வந்த 3 பேர் 10 நிமிஷங்கள் பேசிக் கொண்டிருந்து திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் குண்டுகள் பாய்ந்து சுக்தேவ் சிங் உயிரிழந்தார்.
சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்களும் பதிலடித் தாக்குதலாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கொலையாளிகளில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் இந்தச் சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அங்கு வலதுசாரி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm