நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய கிண்ண இறுதியாட்டம்; JDT அணியுடன் திரெங்கானு அணி மோதல் 

கோலாலம்பூர்: 

2023ஆம் ஆண்டுக்கான மலேசிய கிண்ண இறுதியாட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவுள்ளது. இறுதியாட்டத்தில் JDT அணியுடன் திரெங்கானு அணி மோதுகிறது. 

இந்நிலையில், மலேசிய கிண்ண இறுதியாட்டத்தைக் காண வரும் ரசிகர்கள் LRT ரயில் சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். LRT ரயில் பயன்படுத்துவதால் வாகன நெரிசலைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் மலேசிய கிண்ண இறுதியாட்டம் இங்கு நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக MFL அமைப்பின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஸ்டூவர்ட் ராமலிங்கம் சொன்னார். 

மலேசிய கிண்ண இறுதியாட்டத்தில் ஜொகூர் அணி மீண்டும் கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் உள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதியாட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset