நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தொலைப்பேசி, இணையச் சேவை முடக்கம்; மக்கள் அவதி

சென்னை:

மழை வெள்ளத்தால் மக்கள் வீடுகளில் முடங்கியிருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக மின்சார வசதி தடை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று இணைய தள சேவையும் முடக்கம் செய்யப்பட்டது.

அனைத்து தனியார் நிறுவனங்களின் தொலைப்பேசி இணைப்புகளும் செயல்படவில்லை.

தொலைப்பேசி சேவை செயல் இழந்ததால் தகவல் பரிமாற்றம் ரத்தானது.

மழை பாதிப்பு, நிலவரம் குறித்த தகவல்களைச் சமூக ஊடகங்கள் வழியாக பார்த்துத் தெரிந்து கொண்ட மக்கள் அவை செயலிழந்ததால் அண்மை நிலவரம் குறித்துத் தெரியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் இணையம், வாட்ஸ் அப் சேவை உள்ளிட்ட அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களும் சென்னையில் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.

செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் நேற்று முதல் பேச முடியவில்லை. இன்றும் அதே நிலை நீடிக்கிறது.

இதனால் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களைத் தொடர்பு கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

ஒரு சில பகுதிகளில் இன்று மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மோட்டார் பம்ப் செட், மிக்சி, தொலைப்பேசி சார்ஜர் செய்வது போன்றவைப் பயன்பாட்டிற்கு வந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset