நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

சென்னை:

மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.

விமான புறப்பாடு மற்றம் வருகை வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம்’ புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் நேற்று சேவை முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்துள்ள விமானங்கள் இயங்குவது குறித்து அந்ததந்த நிறுவனங்களிடம் தொடர்புக் கொண்டு தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சென்னையிலிருந்து இன்று புறப்பட வேண்டிய 89 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 88 விமானங்கள் என மொத்தம் 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset