
செய்திகள் மலேசியா
நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றுகளின் சம்பவங்கள் 57% அதிகரிப்பு : டாக்டர் ராட்ஸி அபு ஹாசன்
பெட்டாலிங் ஜெயா:
புதியதாக கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 57.3% அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 3,626 கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.
48% புதிய சம்பவங்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களை உட்படுத்தியதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு வாரம் கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.
கோவிட்-19 நோய் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய் தொற்று அதிகரிப்பு குறித்து பொது மற்றும் தனியார் சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am