![image](https://imgs.nambikkai.com.my/shiv-20dbc.jpg)
செய்திகள் மலேசியா
தமிழ் - சீனப் பள்ளிகள் குறித்து இனியும் கேள்வி எழுப்ப தேவையில்லை: அமைச்சர் சிவக்குமார்
கோலாலம்பூர்:
நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை. மலேசிய அரசியலமைப்பால் தொடர்ந்து செயல்படும் என்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பானது இனியும் அது குறித்து கேள்வி எழுப்ப தேவையில்லை என்று மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
இந்நாட்டில் தாய் மொழி பள்ளிகளை களையெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் தாய்மொழி பள்ளிகள் சட்டப்பூர்வமானவை என்று நீதிமன்ற தீர்ப்பு அதிரடி தீர்ப்பாகும்.
ஆகவே தமிழ்ப் பள்ளிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே தமிழ்பள்ளிகளுக்கு மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. முழு உதவி பெற்ற தமிழ்ப் பள்ளிகள் மற்றும் பகுதி உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கப்பலமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் 25 ஆம் ஆண்டு விருந்தளிப்பு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 2:09 pm
போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது
July 27, 2024, 1:43 pm
ஜொகூரில் அடுத்தாண்டு பைலட் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: ஓன் ஹஃபிஸ் காசி
July 27, 2024, 1:03 pm
உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்
July 27, 2024, 12:49 pm
முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm
நெங்கிரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 26, 2024, 9:47 pm