செய்திகள் தொழில்நுட்பம்
DEEP FAKE தொழில்நுட்ப போலிகளை தடுக்க YOUTUBE நடவடிக்கை
புது டெல்லி:
யூடியூபில் பதிவேற்றப்படும் காணொலிகளில் உண்மையான படங்கள் உள்ளதா அல்லது மாற்றம் செய்யப்பட்ட படங்கள் உள்ளதா என அந்தக் காணொலியை பதிவிடும் நபர்கள் தெரிவிக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
DEEP FAKE தொழில்நுட்பம் மூலம் போலியான காணொலிகள் பதிவிடப்படுவதை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கூகுள் வெளியிட்ட அறிவிக்கையில், வரும் காலங்களில் யூடியூப் தளத்தில் பதிவிடும் காணொலிகளில் உண்மைத்தன்மையுடையதா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக காணொலியின் முகப்பில் விளக்கப்பட வேண்டும்.

AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அதை காணொலியின் முகப்பில் பதிவிட வேண்டும்.
இந்திய அரசுடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளை தடுப்பதில் கூகுள் உறுதியாக உள்ளது. இதற்காக மெட்ராஸ் ஐஐடியுடன் இணைந்து நாட்டிலேயே முதல் ஏஐ தொழில்நுட்ப மையத்தை நிறுவ 1 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 11:50 am
சிறுவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மெட்டா: 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்
March 24, 2026, 12:34 pm
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
March 23, 2026, 10:31 am
வெளிநாட்டு அனிமேஷன் தாக்கம்: குழந்தைகள் சிந்தனைக்கு புதிய அறைகூவல்
March 22, 2026, 5:22 pm
உலகின் முதல் 'தொழுகைக்கு உகந்த' செயற்கை கால்: மலேசியப் பேராசிரியரின் சாதனைப் படைப்பு
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
February 22, 2026, 3:29 pm
