![image](https://imgs.nambikkai.com.my/deepFakes.jpg)
செய்திகள் தொழில்நுட்பம்
DEEP FAKE தொழில்நுட்ப போலிகளை தடுக்க YOUTUBE நடவடிக்கை
புது டெல்லி:
யூடியூபில் பதிவேற்றப்படும் காணொலிகளில் உண்மையான படங்கள் உள்ளதா அல்லது மாற்றம் செய்யப்பட்ட படங்கள் உள்ளதா என அந்தக் காணொலியை பதிவிடும் நபர்கள் தெரிவிக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
DEEP FAKE தொழில்நுட்பம் மூலம் போலியான காணொலிகள் பதிவிடப்படுவதை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கூகுள் வெளியிட்ட அறிவிக்கையில், வரும் காலங்களில் யூடியூப் தளத்தில் பதிவிடும் காணொலிகளில் உண்மைத்தன்மையுடையதா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக காணொலியின் முகப்பில் விளக்கப்பட வேண்டும்.
AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அதை காணொலியின் முகப்பில் பதிவிட வேண்டும்.
இந்திய அரசுடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளை தடுப்பதில் கூகுள் உறுதியாக உள்ளது. இதற்காக மெட்ராஸ் ஐஐடியுடன் இணைந்து நாட்டிலேயே முதல் ஏஐ தொழில்நுட்ப மையத்தை நிறுவ 1 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 5:57 pm
SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ
June 29, 2024, 6:18 pm
விண்வெளியில் வெடித்து சிதறிய ரஷிய செயற்கைக்கோள்
June 24, 2024, 10:06 pm
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்
May 20, 2024, 1:36 pm
iPhone, iPad கருவிகளை கண்களால் பயன்படுத்தும் அம்சம் விரைவில் வருகிறது
April 17, 2024, 10:35 am
செல்போன் டவருக்குப் பதிலாக செயற்கைகோள் மூலம் கைப்பேசிகளை இயக்கும் சோதனையில் சீனா வெற்றி
April 14, 2024, 8:56 pm
விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார் இந்தியர்
April 4, 2024, 6:50 am
இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது
March 15, 2024, 1:11 pm
Open Ai நிறுவனத்தின் விடியோ உருவாக்கும் செய்யறிவு செயலி வருகிறது
March 8, 2024, 5:36 pm
மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம் - ஆய்வில் தகவல்
March 6, 2024, 10:46 am