செய்திகள் உலகம்
சீனாவில் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தல்
பெய்ஜிங்:
சீனாவில் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கவும் அதிகமான மருந்தகங்களைத் திறக்கவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறது.
வடக்கு சீனாவில் மக்கள் கடுமையான சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில் அந்த வேண்டுகோள் சுகாதார அமைச்சிடம் இருந்து வெளிவந்துள்ளது.
புதிதாகப் பரவும் கிருமி அதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற அச்சத்தைத் தணிக்கச் சுகாதார அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
ஏற்கனவே தெரியவந்திருக்கும் கிருமிகளின் கலவையே அதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்துக் கடந்த வாரம் உலகச் சுகாதார நிறுவனம் அது பற்றிய கூடுதல் தகவல்களைக் கேட்டது.
கடந்த மூவாண்டுகளாகக் COVID-19 காரணமாக மக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலைமைக்கு அதுவே காரணம் என்று அவர்களை மேற்கோள்காட்டிச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
பொதுமக்களை முகக்கவசம் அணியும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
பள்ளிகள், தாதிமை இல்லங்கள் ஆகியவற்றில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm