செய்திகள் மலேசியா
வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அறம் செய் தீபாவளி 2023
ஜித்ரா :
வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் பிரதிநிதி மன்றம் "அறம் செய் தீபாவளி" நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்ச்சி இம்மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகச்சி உள்ளூர் சமூகம், B40 பிரிவைச் சேர்ந்த வட மலேசியப் பல்கலைகழக மாணவர்கள், ஏழை குழந்தைகளுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நிகழ்விற்கு அமைப்பாளர்கள் சமூகம் பல்வேறு பிரிவுகளுக்கு உதவிக்கரம் நீட்டினர். அவர்கள் 15 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக உணவு கூடைகள், நன்கொடைகளை வழங்கியதோடு அவர்களுக்காகத் தீபாவளி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
B40 பிரிவைச் சேர்ந்த வட மலேசியப் பல்கலைகழக மாணவர்களுக்கு 2000 வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டது.
மேலும், ஜித்ராவிலுள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு குறிப்பிடத்தக்க 500 வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்வின் தன்னார்வலர்கள் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியத்தின் மீதான மரியாதையைச் சுட்டிக்காட்டி, கோயில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அறம் செய் தீபாவளி நிகழ்ச்சி சமூகம், ஒற்றுமை, கருணை ஆகியவற்றின் சக்திக்குச் சான்றாக நிற்கின்றது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 4:51 pm
அரசாங்கத்தின் உதவித்திட்டங்களில் மக்கள் பங்கேற்று இன்புற வேண்டும்: வ.சிவகுமார்
October 28, 2025, 2:18 pm
பேரா கம்போங் கப்பாயங் சிவஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்தர சஷ்டி விழா
October 28, 2025, 2:11 pm
புக்கிட் கமுனிங் முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சனைக்கு தீர்வு: பிரகாஷ்
October 28, 2025, 2:07 pm
உட்கட்சி பூசல்கள் பெர்சத்து கட்சிக்கு பாதிப்பை கொண்டு வரும்: டத்தோ சரவணக்குமார்
October 28, 2025, 11:46 am
ஷாரா இறப்பதற்கு முன்பு கழிப்பறையில் ஹனாஃபி சட்டை அணிந்த நபரை மாணவி பார்த்துள்ளார்
October 28, 2025, 9:23 am
பிளாஸ்டிக் பையில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
October 28, 2025, 9:05 am
பகாங் தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து சைபுடின் நீக்கம்
October 27, 2025, 7:40 pm
