செய்திகள் மலேசியா
வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அறம் செய் தீபாவளி 2023
ஜித்ரா :
வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் பிரதிநிதி மன்றம் "அறம் செய் தீபாவளி" நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்ச்சி இம்மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகச்சி உள்ளூர் சமூகம், B40 பிரிவைச் சேர்ந்த வட மலேசியப் பல்கலைகழக மாணவர்கள், ஏழை குழந்தைகளுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நிகழ்விற்கு அமைப்பாளர்கள் சமூகம் பல்வேறு பிரிவுகளுக்கு உதவிக்கரம் நீட்டினர். அவர்கள் 15 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக உணவு கூடைகள், நன்கொடைகளை வழங்கியதோடு அவர்களுக்காகத் தீபாவளி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
B40 பிரிவைச் சேர்ந்த வட மலேசியப் பல்கலைகழக மாணவர்களுக்கு 2000 வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டது.
மேலும், ஜித்ராவிலுள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு குறிப்பிடத்தக்க 500 வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்வின் தன்னார்வலர்கள் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியத்தின் மீதான மரியாதையைச் சுட்டிக்காட்டி, கோயில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அறம் செய் தீபாவளி நிகழ்ச்சி சமூகம், ஒற்றுமை, கருணை ஆகியவற்றின் சக்திக்குச் சான்றாக நிற்கின்றது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 10, 2024, 12:41 pm
பிரச்சாரத்தில் இயன்றதைச் செய்துள்ளோம்; கேகேபி தொகுதியைத் தற்காப்போம்: அந்தோனி லோக்
May 10, 2024, 11:33 am
மோனோ ரயில் சேவை முழு செயல்பாட்டுக்குத் திரும்பியது: ரேபிட் கேஎல்
May 10, 2024, 11:17 am
தேர்தலை புறக்கணிப்பதாக மஇகா மீது அவதூறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: தினாளன்
May 10, 2024, 11:04 am
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல்: 39,362 வாக்காளர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 10, 2024, 10:44 am
தேர்தல் ஆணையர் டான்ஶ்ரீ அப்துல் கனி சாலே பணி ஓய்வு பெற்றார்
May 10, 2024, 10:36 am
இந்திய சமூகம் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்: டத்தோ ரமணன்
May 10, 2024, 10:29 am