செய்திகள் இந்தியா
பிகாரில் இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்கிறது
பாட்னா:
பிகாரில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கு விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதில் ஓபிசி, இபிசி 63% இருப்பது தெரியவந்தது. அதேபோல் உயர்ஜாதி வகுப்பினர் 10 சதவீதமும் பட்டியலின வகுப்பினர் (எஸ்.சி.) 19.65 சதவீதமும் பழங்குடியினர் (எஸ்டி) 1.68 சதவீதமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், ஓபிசி, இபிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த சட்டம் கொண்டு வரப்படும் என்று நிதீஷ் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am