நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிகாரில் இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்கிறது

பாட்னா:

பிகாரில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கு விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதில் ஓபிசி, இபிசி 63% இருப்பது தெரியவந்தது. அதேபோல் உயர்ஜாதி வகுப்பினர் 10 சதவீதமும் பட்டியலின வகுப்பினர் (எஸ்.சி.) 19.65 சதவீதமும் பழங்குடியினர் (எஸ்டி) 1.68 சதவீதமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், ஓபிசி, இபிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்த சட்டம் கொண்டு வரப்படும் என்று நிதீஷ் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset