
செய்திகள் கலைகள்
ரஷ்மிகா மந்தனாவின் மார்ஃபிங் காணொலி: புகார் அளித்த 24 மணி நேரத்தில் விடியோவை நீக்க உத்தரவு
புது டெல்லி:
பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் எனப்படும் போலி விடியோ இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப விதியின் கீழ் புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என்று அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் விடியோவை வைத்து ரஷ்மிகாவின் முகத்துடன் போலியாக அந்தக் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்த நடிகை ரஷ்மிகா, சமூக ஊடகத்தில் போலி காணொலி பரவுவது மன வலியை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற அடையாளத் திருட்டால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன், ஒரு சமூகமாக இச் செயலை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தச் சூழலில், போலி காணொலியை நீக்க சமூக ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புகார் அளித்த 24 மணி நேரத்தில் சமூக ஊடகங்கள் விடியோவை நீக்கவில்லை என்றால் 1 லட்சம் ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 1, 2023, 11:50 am
பிரதர்.....இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது: இயக்குநர் பி.சமுத்திரகனி அறிக்கை
November 29, 2023, 4:28 pm
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியீடு
November 29, 2023, 4:26 pm
பாடகர் கார்த்திக்கின் KARTHIK LIVE IN KL 2024 இசைநிகழ்ச்சி எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது
November 29, 2023, 4:05 pm
கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவமனை நிர்வாகம் தகவல்
November 29, 2023, 3:29 pm
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை
November 28, 2023, 11:20 am
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
November 28, 2023, 7:12 am
தில்லானா மோகனாம்பாள் புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்
November 27, 2023, 1:08 pm
கேரள பல்கலைக்கழக கலைநிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 பேர் பலி
November 27, 2023, 12:16 pm