செய்திகள் கலைகள்
ரஷ்மிகா மந்தனாவின் மார்ஃபிங் காணொலி: புகார் அளித்த 24 மணி நேரத்தில் விடியோவை நீக்க உத்தரவு
புது டெல்லி:
பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் எனப்படும் போலி விடியோ இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப விதியின் கீழ் புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என்று அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் விடியோவை வைத்து ரஷ்மிகாவின் முகத்துடன் போலியாக அந்தக் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்த நடிகை ரஷ்மிகா, சமூக ஊடகத்தில் போலி காணொலி பரவுவது மன வலியை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற அடையாளத் திருட்டால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன், ஒரு சமூகமாக இச் செயலை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார்.
இந்தச் சூழலில், போலி காணொலியை நீக்க சமூக ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புகார் அளித்த 24 மணி நேரத்தில் சமூக ஊடகங்கள் விடியோவை நீக்கவில்லை என்றால் 1 லட்சம் ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 5:10 pm
சிவ கார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்
January 2, 2026, 3:27 pm
தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன் செய்யும் நயன்தாரா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
December 31, 2025, 11:48 am
இயக்குனர் அமீர் பருத்தி வீரனில் அறிமுகப்படுத்திய நாட்டுப்புற பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
December 30, 2025, 10:53 am
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் தகவல்
December 28, 2025, 10:18 pm
டில்லியில் நடைபெற்ற விருது விழாவில் சிவ ஸ்ரீ யோகேஸ்வர சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்
December 28, 2025, 10:12 pm
விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான செயற்கை நுண்ணறிவு (AI) படங்கள்
December 26, 2025, 3:55 pm
“ஜன நாயகன்” திரைப்படத்தின் 3 ஆவது பாடலின் முன்னோட்டம் வெளியானது
December 20, 2025, 12:42 pm
திரைப்பட விழாவில் சசிகுமாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது
December 16, 2025, 2:41 pm
