நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய முறை

புது டெல்லி:

தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்த்து கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அக்டோபர் 7 வரை ஒன்றிய அரசு அவகாசம் அளித்தது.

அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவோ ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset