நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கேரளாவில் வழிபாட்டு கூட்ட அரங்கில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம்

எர்ணாகுளம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடக்கும் இடத்தில்  இன்று காலை 9 மணியளவில்  மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் நடைபெற்றுள்ளது. 

இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிகின்றன. 

வன்முறை நிகழ்வுகள் அது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். 

இந்த பயங்கரவாத நடவடிக்கையின் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset