நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

முதலீட்டை அதிகரிக்க இந்தியா - சவூதி அரேபியா பேச்சு

புது டெல்லி:

முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா சவூதி அரேபியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சவூதி அரேபியாவில் இந்திய வர்த்த அமைச்சர் பியூஸ் கோயல், அந் நாட்டு முதலீட்டுத் துறை அமைச்சர் காலித்  அல் ஃபாலியாவைச் சந்தித்து  பேசினார்.

தனது எக்ஸ்  பக்கத்தில் பியூஷ் கோயல், இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் முதலீடுகளை விரிவுபடுத்துவது, வேகமான வளர்ச்சி மற்றும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து காலித் அல்ஃபாலியாவுடனான சந்திப்பின்போது,  விவாதித்தேன் என்று குறிப்பிட்டார்.

இந்தியா - சவூதி அரேபியா இடையே கடந்த 2021,22ஆம் ஆண்டில் ரூ.3,55,826 கோடியாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2022-23ஆம் ஆண்டில் ரூ.4,47,936 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset