செய்திகள் உலகம்
பாலஸ்தீனர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்; நாங்கள் இழந்தது போதும்: முஹம்மது அப்பாஸ்
கெய்ரோ:
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு நாடுகள், ஐரோப்பிய கவுன்சில், மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், "பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்களைவிட்டு எப்போதும் வெளியேற மாட்டார்கள்; நாங்கள் இழந்தது போதும்' என்று மிக உருக்கமாக பேசினார்.
எகிப்து அதிபர் எல் சிசி பேசுகையில், பாலஸ்தீனர்களை வீடுகளைவிட்டு விரட்டி அவர்களின் தனி நாடு கனவை முறியடிக்க முடியாது என்றார்.
இராக் பிரதமர் முஹம்மது ஷியா அல் சுடானி, "காசா மக்களை விரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாலஸ்தீனர்களுக்கு தங்கள் சொந்த நிலம் தவிர வேறு நாடு இல்லை. உடனடியாக போரை நிறுத்தி சிறைக் கைதிகளை இரு நாடுகளும் விடுவிக்க வேண்டும்" என்றார்.
துருக்கி, ஜோர்டான் நாட்டு அதிபர்களும் இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகள் காசா மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தின.
ஹமாஸ் தாக்குதலுக்காக பாலஸ்தீன மக்களுக்கு ஒட்டுமொத்த தண்டனை வழங்குவது நியாமானதால் என ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மாநாட்டில் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 5:03 pm
ஃபேஷன் நிகழ்ச்சியில் 200 காரட் வைர நகைகள் அணிந்து அசத்தியப் பெண் தொழிலதிபர்
May 8, 2024, 2:38 pm
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை இழக்கிறார் டயானா கமகே
May 8, 2024, 10:36 am
பால்ட்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: ஆறாவது சடலம் மீட்பு
May 8, 2024, 9:55 am
உலகம் முழுவதும் உள்ள கோவிட்19 தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனெகா மீட்டுக் கொண்டது
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm