செய்திகள் உலகம்
14 நாள்களுக்கு பிறகு 20 டிரக் நிவாரண பொருள் செல்ல எல்லையை திறந்தது இஸ்ரேல்
ரஃபா:
எகிப்து எல்லையை சனிக்கிழமை இஸ்ரேல் திறந்ததையடுத்து, போர் தொடங்கி 14 நாள்களுக்குப் பிறகு காசாவுக்குள் 20 டிரக்குகளில் நிவாரணப் பொருள்கள் சென்றன.
எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து முதல் முறையாக 2 அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்குப் பதிலாக காசாவுக்குள் 20 டிரக்குகள் மட்டும் செல்ல இஸ்ரேல் அனுமதித்தது.
எகிப்து எல்லையில் 3,000 டன் நிவாரணப் பொருள்கள் கொண்ட 200க்கும் மேற்பட்ட டிரக்குகள் காத்திருந்தபோதிலும், வெறும் 20 டிரக்குகள் மட்டும் காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டன.
இந்த டிரக்குகளில் உள்ள 44,000 குடிநீர் பாட்டில்கள் 22,000 மக்களுக்கு ஒருநாள் பயன்பாட்டுக்கு மட்டுமே வரும் என்பதால், பெருமளவில் நிவாரணப் பொருள்கள் காசாவுக்குள் உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளது என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் நிவாரண பொருகள் செல்லும் வகையில் ரஃபா எல்லையை திறக்க வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
போருக்கு முன்பு தினசரி 400 டிரக் நிவாரணப் பொருள்கள் காசாவுக்குள் சென்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 2:38 pm
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை இழக்கிறார் டயானா கமகே
May 8, 2024, 10:36 am
பால்ட்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: ஆறாவது சடலம் மீட்பு
May 8, 2024, 9:55 am
உலகம் முழுவதும் உள்ள கோவிட்19 தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனெகா மீட்டுக் கொண்டது
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm