நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான போருக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்: சாலா

லண்டன்:

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான போருக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் லிவர்பூல் ஆட்டாக்காரர் முஹம்மத் சாலா வலியுறுத்தினார்.

இஸ்ரேல், பாலஸ்தீன் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

குறிப்பாக இஸ்ரேல் தாக்குதலுக்கு பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

சமீபத்திய வாரங்களில் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் அதிகரிப்பது மிகவும் வேதனையளிக்கிறது. 

ஒவ்வொரு உயிரும் புனிதமானது. பாதுகாக்கப்பட வேண்டும். படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும், குடும்பங்கள் துண்டாடப்படுகின்றன.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்பது இப்போது தெளிவாகிறது. 

அங்குள்ள மக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்  என்று முஹம்மத் சாலா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset