நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி மகத்தான வெற்றி: பத்துமலை

சுங்கைபூலோ :

தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் பத்துமலை கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆண், பெண் இரு பிரிவுகளில் இருந்து போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்துக் கொண்டனர்.

அதே வேளையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் இப்போட்டியை காண இங்கு வந்திருந்தனர்.

இது தான் இப்போட்டிக்கு கிடைத்த வெற்றியாகும். அடுத்தாண்டு இன்னும் சிறப்பான முறையில் இப்போட்டி நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இதனிடையே தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான கால்பந்து பயிற்சிகளை வழங்க பெட்டாலிங் கால்பந்து சங்கம் இலக்கு கொண்டுள்ளது.

இதற்கான மித்ராவின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. அதற்கான கோரிக்கை மனுவும் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு தலைவர் டத்தோ ரமணனிடம் ஒப்படைக்கப்படும் என்று போட்டி இயக்குநர் ராமச்சந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset