செய்திகள் மலேசியா
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில் சாதனைப் படைக்க கைகொடுங்கள்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
பத்துமலை :
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நடனப் போட்டியில் பங்கேற்க நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளனர்.
அப்பள்ளி மாணவர்களுக்கு சமுதாய மக்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.
அனைத்துலக நடனப் போட்டி இந்தியாவில் குவாலியர் நகரத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி வரும் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மலேசியாவை பிரதிநிதித்து பத்துமலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கான மாணவர்களுடன் 4 ஆசிரியர்களும் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
கல்வியமைச்சின் முழு அங்கீகாரத்துடன் இந்த நடனக் குழுவுனர் அங்கு செல்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு செல்வதற்கு மாணவர்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
பள்ளி பெற்றோர் ஆயிரம் சங்கம் பொது மக்களிடம் பொதுமக்களிடம் நிதி உதவியை கேட்கும் வீடியோவை நம்பிக்கை செய்திகள் அகப்பக்கத்தில் பார்த்தேன்.
இதன் அடிப்படையில் சக்தி அறவாரியத்தின் கீழ் அம்மாணவர்களுக்கு கனிசமான நிதி வழங்கப்பட்டது.
இதேபோன்று அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அம்மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இம்மாணவர்கள் இந்தியா சென்று வர செலவாகும் தொகையில் இதுவரை 60 ஆயிரம் ரிங்கிட்டை சேகரித்து விட்டோம். இன்னும் 90 ஆயிரம் ரிங்கிட் தேவைப்படுகிறது.
ஆகவே பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நல்லுள்ளங்களின் ஆதரவை எதிர்நோக்குகிறது என்று அதன் தலைவர் ஹரிராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 1:04 pm
காணாமல் போன மீனவர் மரணமடைந்த நிலையில் மீட்பு
December 23, 2025, 12:18 pm
கூடுதல் உத்தரவு; அனைத்து தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க வேண்டும்: பிரதமர்
December 23, 2025, 10:54 am
வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க புதிய சட்ட மசோதாவை இயற்ற வேண்டிய அவசியமில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
December 22, 2025, 11:06 pm
அன்வாருக்கு முடியும்; நஜிப்பிற்கு ஏன் முடியாது?: ஹசான் கேள்வி
December 22, 2025, 10:59 pm
கிள்ளானின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பாஸ்டர் பாவல் போனியின் சமூக சேவை தொடர வேண்டும்: சசிதரன்
December 22, 2025, 10:56 pm
தொடர்ந்து மிரட்டியும் வெளியே போகவில்லை என்றால் அச்சுறுத்தலுக்கு அர்த்தம் இருக்காது: ரபிசி
December 22, 2025, 10:51 pm
நெருப்பு எரியும் போது மேலும் எண்ணெயை ஊற்ற வேண்டாம்: ஜாஹித்
December 22, 2025, 10:48 pm
மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்
December 22, 2025, 6:29 pm
