
செய்திகள் மலேசியா
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில் சாதனைப் படைக்க கைகொடுங்கள்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
பத்துமலை :
பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக நடனப் போட்டியில் பங்கேற்க நிதிப் பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளனர்.
அப்பள்ளி மாணவர்களுக்கு சமுதாய மக்கள் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறினார்.
அனைத்துலக நடனப் போட்டி இந்தியாவில் குவாலியர் நகரத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி வரும் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மலேசியாவை பிரதிநிதித்து பத்துமலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கான மாணவர்களுடன் 4 ஆசிரியர்களும் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.
கல்வியமைச்சின் முழு அங்கீகாரத்துடன் இந்த நடனக் குழுவுனர் அங்கு செல்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு செல்வதற்கு மாணவர்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர்.
பள்ளி பெற்றோர் ஆயிரம் சங்கம் பொது மக்களிடம் பொதுமக்களிடம் நிதி உதவியை கேட்கும் வீடியோவை நம்பிக்கை செய்திகள் அகப்பக்கத்தில் பார்த்தேன்.
இதன் அடிப்படையில் சக்தி அறவாரியத்தின் கீழ் அம்மாணவர்களுக்கு கனிசமான நிதி வழங்கப்பட்டது.
இதேபோன்று அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அம்மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இம்மாணவர்கள் இந்தியா சென்று வர செலவாகும் தொகையில் இதுவரை 60 ஆயிரம் ரிங்கிட்டை சேகரித்து விட்டோம். இன்னும் 90 ஆயிரம் ரிங்கிட் தேவைப்படுகிறது.
ஆகவே பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நல்லுள்ளங்களின் ஆதரவை எதிர்நோக்குகிறது என்று அதன் தலைவர் ஹரிராஜா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am
தாயுடன் ஒரு நாள் வெளியே சென்ற மகள்: நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக ஊடக்த்தில் வைரல்
July 12, 2025, 10:39 am
திருமண நகைகள் போலி: அறிந்து அதிர்ந்த தனித்து வாழும் தாய்!
July 12, 2025, 10:00 am
PLIK அனுமதிக்காக மூன்றாம் தரப்பினரின் ஒப்புதல் தேவையில்லை: டத்தோ சிவக்குமார்
July 11, 2025, 9:27 pm
ஸ்ரீ பெர்டானாவில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு
July 11, 2025, 8:32 pm
82,637 சுகாதார ஊழியர்களுக்கு ஷிப்ட் வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: ஜேபிஏ
July 11, 2025, 8:29 pm