நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்; பயணிகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் எச்சரிக்கை

சிங்கப்பூர்: 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சண்டை தீவிரமடைந்துள்ளதால் சிங்கப்பூர் நாட்டவர்கள் காசா முனை, கிழக்கு காசா பகுதி, லெபனான், சிரியா ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

போர் காரணமாக இஸ்ரேல் நாட்டிற்கும் செல்வதைச் சிங்கப்பூர் வாழ் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இஸ்ரேல், பாலஸ்தீனம் நாட்டிற்கு செல்ல நினைக்கும் மக்கள் அண்மைய நிலவரங்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். போர் பதற்ற நிலைக்கு ஆளாகும் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் காரணமாக விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset