நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பொதுமக்களின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை: நூற்றுக்கணக்கானோரை கொன்றது இஸ்ரேல்  

காசா: 

பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீதும் பொதுமக்களின் குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  

இஸ்ரேலை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டுமழை பொழிந்தன.

இதில் அல்-குவாத் திறந்தநிலை பல்கலைக்கழகம் அருகில் உள்ள 5 மாடி குடியிருப்பு தரைமட்டமானது. 

இதேபோல அந்த நகரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பல்வேறு குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன. பலர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset