செய்திகள் உலகம்
சிரியா ராணுவ அகாதெமியில் டிரோன் தாக்குதல்: 89 பேர் பலி
டமாஸ்கஸ்:
சிரியாவிலுள்ள ராணுவ அகாதெமியில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 89பேர் உயிரிழந்தனர். 277 பேர் காயமடைந்தனர்.
பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா நடந்து முடிந்த சில நிமிஷங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டு காலமாக உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் சிரியாவில் ட்ரோனை ஆயுதமாகப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று சிரியா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலை நடத்தியது யார் என்ற விவரத்தை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த மோசமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்லிப் மாகாணத்தில் கிளர்ச்சிப் படையினரின் வசம் எஞ்சியிருக்கும் பகுதியில் சிரியா விமானங்கள் முழுவதும் குண்டுவீச்சி தாக்கின.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm