செய்திகள் இந்தியா
விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சாவு
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் மண்டிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு கடந்த 19 நாட்களுக்கு முன்பாக தான் குழந்தை பிறந்திருந்தது. சம்பவத்தன்று, நள்ளிரவில் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு சுமதி தூங்க வைத்திருந்தார்.
இந்த நிலையில், மறுநாள் அதிகாலையில் அந்த குழந்தை வாயில் ரத்தம் வந்ததும், வயிறு பெரிதாகியும் உயிர் இழந்திருந்தது.
இதனால் சுரேஷ் பாபு, அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை சாவுக்கு மண்டிபேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்திருந்தே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது மண்டிபேட்டையில் விநாயகர் சிலை கரைப்புக்காக விடிய, விடிய அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்ததுடன், மேளங்கள் முழங்கியதுடன், வாலிபர்கள் சத்தம் போட்டபடியே இருந்துள்ளனர்.
அந்த சத்தம் காரணமாக பச்சிளம் குழந்தைக்கு நெஞ்சுவலி உண்டாகி வாயில் ரத்தம் வந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிக சத்தமே தனது குழந்தையின் சாவுக்கு காரணம் என்று சுரேஷ் பாபு, சுமதி குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
ஆனால் பச்சிளம் குழந்தையின் சாவுச் சம்பவம் மண்டிபேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதாரம்: தினத் தந்தி
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am