நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புகைமூட்டம் காரணமாக இந்தோனேசியா ஜம்பியில் பள்ளிகள் மூன்று நாட்களுக்கு மூடல்

ஜகார்த்தா: 

இந்தோனேசியா நாட்டின் ஜம்பியில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மழலையர் பள்ளி முதல் இடைநிலை பள்ளி வரை அனைத்து பள்ளிகளும் கட்டங்கட்டமாக மூடப்பட்டது. 

இன்று தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகிறது. ஜம்பியில் காற்றின் தரம் மோசமடைந்திருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தென் சுமத்ராவில் ஏற்பட்ட தீ காரணமாக புகை மூட்டம் அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது. வரும் நாட்களில் இந்தோனேசியாவின் சில பகுதிகளில் புகை மூட்டம் ஏற்படலாம் என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset