நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஸ்காட்லாந்தில் இந்திய தூதர் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தடுத்து நிறுத்தம்

லண்டன்:

ஸ்காட்லாந்தில் சீக்கிய குருத்வாராவுக்குள் நுழையவிடாமல், இந்தியத் தூதரை காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தடுத்து நிறுத்தினர்.

இந்த விவகாரத்தை, பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது.

பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசுவாமி, ஸ்காட்லாந்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளா். கிளாஸ்கோ நகரில் உள்ள குருத்வாராவுக்கு சென்றார்.

அவரது காரை மறித்த காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் சிலர், திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, குருத்வாராவுக்குள் செல்லாமல், அவர் திரும்பினார்.

குருத்வாரா கமிட்டியின் அழைப்பின்பேரில், அங்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிய இந்தியத் தூதர் திட்டமிட்டிருந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பான விடியோவை, பிரிவினைவாதிகள் வெளியிட்டுள்ளனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset