செய்திகள் இந்தியா
போலி எஸ்எம்எஸ்ஸுக்கு பயந்து பள்ளி மாணவர் தற்கொலை
கோழிக்கோடு:
கேரளத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பெயரில் வந்த போலி எஸ்எம்எஸ்ஸுக்கு பயந்து பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோழிக்கோடு நகரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஆதிநாத் கடந்த புதன்கிழமை மாலை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணையில், மாணவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்தது.
அதில், அரசு தடை செய்த இணையதளத்தில் திரைப்படங்களை பார்த்ததாக தன்மீது பொய்யாக குற்றம்சாட்டி குறுஞ்செய்தி வந்ததாகவும், ரூ.30,000 உடனடியாக செலுத்தாவிட்டால், சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்ததாக அந்த மாணவர் கடிதத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து, மாணவரின் கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்டவற்றை காவல் துறையினர் சோதித்தனர். அதில் மாணவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் போலி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am