செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு
பெஷாவர்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபர்பக்துன்கவா மாகாணங்களில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுவெடிப்புகளில் 62 பேர் பலியாகினர்.
பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மஸ்தூங் நகரில் ஜும்மா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மீலாது நபி நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் 56 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்போது உயிரிழந்தோர் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
கைபர்பக்துன்கவா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
பலூசிஸ்தான் மாகாண தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மசூதிகள், பள்ளிக் கூடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் நாங்கள் தாக்குதல் நடத்துவதில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm