நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நியூயார்க் நகரில் வெள்ளம் : அவசர நிலை அறிவிப்பு

நியூயார்க் :

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் ரயில் நிலையங்கள், தெருக்கள், நெடுஞ்சாலைகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

லாகார்டியா விமான நிலையம் நேற்று (29 செப்டம்பர்) தற்காலிகமாக மூடப்பட்டது.

சில இடங்களில் ஒரே இரவில் 12 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இன்னும் 17 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோக்குல் கூறினார்.

எவரும் மாண்டதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை.

நியூஜெர்சியின் ஹொபோக்கன்  நகரிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கும்படி நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset