செய்திகள் இந்தியா
மலேசியாவில் சிக்கித் தவிக்கும் நெல்லை இளைஞர்கள்: தாய் கண்ணீருடன் புகார்
சென்னை :
முகநூல் மூலம் கிடைத்த தொடர்பை நம்பி முடி திருத்தும் பணிக்காக தமிழகத்தில் இருந்து சென்ற மூன்று இளைஞர்கள் மலேசியாவில் உணவு இருப்பிடமின்றி தவிப்பதாகவும், பணிக்காக அழைத்துச் சென்று லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட நபரின் தாய் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த மாவடி பகுதியை சேர்ந்தவர் மங்கலம், இவருக்கு செல்வன் என்ற கணவரும் எபனேசர் என்ற மகனும் உள்ளனர்.
செல்வம் முடி திருத்தும் நிலையம் வைத்து நடத்தி வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த தொழிலை மங்களத்தின் மகனான எபநேசர் பார்த்து வந்துள்ளார்.
தனியாக வள்ளியூர் அடுத்த கிள்ளிகுளம் பகுதியிலும் முடி திருத்தும் நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் ஏழ்மை நிலை காரணமாக வெளிநாடுகளில் சென்று சம்பாதித்தால் பணம் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முகநூல் மூலம் கிடைத்த தொடர்பை வைத்து மலேசியா நாட்டில் முடி திருத்தும் பணிக்காக விண்ணப்பித்து கடந்த ஜூன் மாதம் சுற்றுலா விசா மூலம் முடி திருத்தும் பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மாதம் ரூபாய் 35,000 ஊதியமாக வழங்குவதாகவும் பணி செய்வதற்கான வேலை பெர்மிட் மாத ஊதியத்தில் இருந்து சிறுக சிறுக தொகை பிடித்தம் செய்து எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.
அங்கு பணிக்கு சென்ற சில நாட்களிலேயே எபநேசரின் உறவினர்களான கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் இங்குள்ள பணி தொடர்பாக தெரிவித்து மலேசியாவிற்கு அழைத்துள்ளார்.
அவர்களும் கடந்த ஜூலை மாதம் முடி திருத்தும் பணிக்காக மலேசியா சென்றுள்ளனர். இந்நிலையில் முடித்திருத்துவம் நிலையத்தில் வழங்கப்படும் சம்பளம் முறையாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளது.
மேலும் முதல் மாத சம்பளத்தில் முழு தொகையையும் வேலை பெர்மிட் வாங்கி தருவதாக பிடித்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மலேசியாவில் உள்ள முதலாளியிசம் கேட்டதற்கு மிரட்டும் தொனியில் பேசியதோடு இங்கிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்பது போன்றும் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. மிகுந்த கஷ்டத்தில் இருந்த எபநேசர் தனது தாயிடம் நடந்தது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் தனது மகனை மீட்டு தர வலியுறுத்தி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எபநேசரின் தாயார் மங்கலம் புகார் அளித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am