
செய்திகள் சிந்தனைகள்
மூன்றாம் பெருநாள் முத்திரை நபி பிறந்தநாள் வாழ்த்துகள் பாசனமாகட்டும் வசந்தங்கள் சாசனமாகட்டும்: கவியருவி அப்துல் காதர்
நகலெடுக்க முடியா நாயகன் நிழல் ஒளியாகும் - நபி
முகிலெடுத்த மழைவானும் நபியருளில் ஒரு துளியாகும்
திகிலெடுத்த மறுமைத் தீர்ப்புநாளில் - ஓரிறைத்
தீன்நெறியே தீநரகின் முடிவாகும்! - கஸ்தூரிவாச
அகிலெடுத்த மேனியிலே அரசரவர் ஆயுளிலே
அணிந்த கிழிசலில்லா ஆடைச்சவக் கோடியாகும் - அவர்கால்
துகளெடுத்து அஞ்சனச் சுருமா தீட்ட வேண்டும்
துஆவிரல் மினாரக்கள் கலிமா மொழிந்து காட்ட வேண்டும்!
சொர்க்கம் நரகம் இரண்டும் ஒருசேரத்
தோன்றல்நாள் வாழ்த்துச் சொல்லிடும் பிறந்தநாள்
சொர்க்கத் தனிமைத் துயர்நபி தோற்றத்தால் மாறியது
துயர்நரகம் சுமை குறந்தது என்று மகிழ்ந்தது
வர்க்கபேதம் நிறபேதம் வர்ணாசிரம அடுக்குபேதம்
வகுப்புவாதம் தீர்த்தநாள் வனிதையர் உரிமை சேர்த்தநாள்
சர்க்கார்கள் பேரனவாத சாராயத்தால் ஓட வேண்டாம்
சகோதரத்துவ மாலைத் தொடுக்கப் பெருமானார் இழைசேர்ப்போம்!
- கவியருவி அப்துல் காதர்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am