நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

4 மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் இன்டர்நெட் சேவை

இம்பால்:

மணிப்பூரில் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்துக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்துக்கும் இடையே கடந்த மே 3 முதல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 175க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.  இதனால் மாநிலம் முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூரில் வன்முறை காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழல், அண்மையில் எடுக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட விளைவு அல்ல. அது முந்தைய அரசுகளின் திட்டமிடப்படாத கொள்கைகளால் ஏற்பட்ட விளைவாகும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset